திருவாரூர்

ஆலங்குடி குரு பகவான் கோயிலில் திருப்பாவை விழா

DIN

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி  ஆபத்சகாயேசுவரர் கோயிலில் திருப்பாவை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடையே திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, திருவோணமங்கலம் மகாதேவ குருஜி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். விழாவில், அறநிலைய ஆய்வாளர் தமிழ்மணி, புலவர் சுகுமாறன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT