வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் திருப்பாவை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடையே திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, திருவோணமங்கலம் மகாதேவ குருஜி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். விழாவில், அறநிலைய ஆய்வாளர் தமிழ்மணி, புலவர் சுகுமாறன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.