திருவாரூர்

இருதரப்பினரிடையே மோதல்: 5 பேர் கைது

DIN

மன்னார்குடி அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். 
மன்னார்குடியை அடுத்த வாலிஓடையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (38). இவர் வியாழக்கிழமை மாலை வாலிஓடை ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது குடியிருப்புப் பகுதியில் அமர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (21), இளையராஜா (22), சத்தியசீலன் (24) ஆகியோர் மதுகுடித்துக் கொண்டிருந்தனராம்.
இதைப் பார்த்த மகேந்திரன் அவர்களைக் கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மகேந்திரனை அவர்கள் தாக்கினார்களாம். இதையறிந்த மகேந்திரனின் நண்பர்கள் அருள்பாபு (27), ரவி (40) ஆகியோர் அங்கு வந்து விஜய் தரப்பினரைத் தாக்கினராம்.
இதுகுறித்து தலையாமங்கலம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விஜய், இளையராஜா, சத்தியசீலன், மகேந்திரன், அருள்பாபு ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT