திருவாரூர்

காவல் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

சிவகங்கையில் மடிக்கணினி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்து திருவாரூரில் திங்கள்கிழமை இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை, இதுகுறித்து போராட்டம் நடத்தும் மாணவர்களை போலீஸார் தாக்குகின்றனர், சிவகங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களை போலீஸார் தாக்கியுள்ளனர், இதுகண்டிக்கத்தக்கது என கூறி திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் துணைச் செயலர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் சுர்ஜித், மாநில துணைச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT