திருவாரூர்

கிராம சபைக் கூட்டம்: குடிநீர் சேமிப்பு குறித்து ஆலோசனை

DIN


குடிநீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பாக  நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 44  கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் மற்றும் பெரம்பூர் ஊராட்சியில் நீர்மேலாண்மை குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு மண்டல அலுவலரும் உதவித் திட்ட அலுவலருமான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே. சந்தானகிருஷ்ண ரமேஷ், எம். தமிழ்ச்செல்வி, துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், பாலசுப்பிரமணியன், முரளி, நேரு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடிநீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புத்தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT