திருவாரூர்

சம்பளப் பட்டியல் மென்பொருள் குளறுபடிகளை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

சம்பளப் பட்டியல் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குளறுபடியை சரி செய்யக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சம்பளப் பட்டியல் தயாரிக்க, குளறுபடிகளுடன் கூடிய மென்பொருள் உள்ளதாகவும், அதை சரிசெய்யாமல், அதன்படியே பட்டியலை கருவூலத்தில் வழங்க வேண்டும் என வற்புறுத்துவதைக் கண்டித்தும் பழைய முறைப்படியே சம்பளப் பட்டியலை தயாரித்து கருவூலத்தில் வழங்கக் கோரியும் திருவாரூரில் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் செளந்தரராஜன், மாவட்டச் செயலர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT