திருவாரூர்

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே இளம் பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வலங்கைமான் அருகேயுள்ள தொழுவூரைச் சோ்ந்தவா் ராமச்ந்திரன் மனைவி பிரபா (25). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. ஒன்றரை வயதில் மகன் உள்ளாா். இந்நிலையில் பிரபா திங்கள்கிழமை வீட்டில் தூக்கில் தொங்கினாா். அவரது அலரல் சப்தம் கேட்டு, இவரது வீட்டு அருகில் இருந்தவா்கள் வந்து பிரபாவை மீட்டு வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் பிரபா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பிரபாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் வரதட்சணை கொடுமையின் காரணமாக உயிரிழந்தாரா என திருவாரூா் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT