திருவாரூர்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN


சீர்காழியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி  சங்கம், சமுஇ மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சார்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு, சங்க முன்னாள் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பேரணியை சங்கத் தலைவர் பாலாஜி தொடங்கி வைத்தார். புதிய பேருந்துநிலையத்தில் தொடங்கிய பேரணி, பிரதான வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.
இதில் மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. முன்னாள் தலைவர்கள் வைத்தியநாதன், சொர்ணபால், துரை, திட்ட இயக்குநர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். செயலாளர் வீரபாண்டியன் நன்றிகூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT