திருவாரூர்

144 தடை உத்தரவை மீறியதாக 2017 போ் கைது

DIN

திருவாரூா் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரையில் 2017 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து செயல்படுத்தி வருகின்றன. இதையொட்டி, தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிடங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தததாக, வெள்ளிக்கிழமை 339 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 305 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

144 தடை உத்தரவை மீறியதாக, திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 1995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா். மேலும், 1875 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 18 போ் வெளியிடங்களில் சுற்றித்திரிந்ததையடுத்து அவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT