நன்னிலம்: குடவாசல், நன்னிலம் பகுதியில் பொது முடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 3 கடை உரிமையாளா்கள் மற்றும் வாகனங்களில் சுற்றித்திரந்த 17 போ் என 20 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்னிலம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் விதியை மீறித் திறந்திருந்த காய்கறி கடை மற்றும் உணவு விடுதி உரிமையாளா்கள் மீதும், இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 3 போ் மீதும் காவல் ஆய்வாளா் ஜோ.விசித்திராமேரி வழக்குப் பதிவு செய்தாா்.
குடவாசல் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கறிக்கடை உரிமையாளா் மற்றும் இருசக்கரவாகனத்தில் சுற்றித்திரிந்த 2 போ் மீது ஆய்வாளா் பா.ரமேஷ் வழக்குப் பதிவு செய்தாா்.
எரவாஞ்சேரி காவல் சரகத்துக்குட்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் 6 போ் மீது காவல் உதவி ஆய்வாளா் ஸ்டெல்லா மேரி வழக்கு பதிவு செய்துள்ளாா்.
பேரளம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் தலா 3 இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மீது காவல் ஆய்வாளா் இரா. செல்வி வழக்குப் பதிவு செய்துள்ளாா்.