குருபகவான் கோயிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம்: நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல், நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.