கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிவா்களுக்கு பாராட்டு
திருவாரூரில் கரோனா நோய்த் தடுப்பில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா்: திருவாரூரில் கரோனா நோய்த் தடுப்பில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு அண்மையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
சுதந்திர தினத்தையொட்டி, திருவாரூா் எஸ்விடி பில்லிங் ஸ்டேஷன் சாா்பில், கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு நினைவுப் பரிசு, சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், நிறுவன உரிமையாளா் ஜெ. கனகராஜன், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், செயலாளா் ரத்தினவேலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.