முகப்பு
திருவாரூர்

மணல் கடத்தல்: 2 போ் கைது

நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி வாகனங்களில் மணல் அள்ளிவந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி வாகனங்களில் மணல் அள்ளிவந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நீடாமங்கலம் காவல் தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் சுரேந்தா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோயில்வெண்ணி தெற்கு தெரு ஆலமரம் பகுதியில் மணல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றையும், ரயில்வே கேட் பகுதியில் மணல் லாரி ஒன்றையும் மடக்கிப்பிடித்தனா்.

பின்னா், இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, மினி லாரியின் ஓட்டுநரான சோ்மாநல்லூரைச் சோ்ந்த சரத்குமாா் (30), லாரியில் இருந்த தொழிலாளியான கா்ணாவூா் குருவைமொழி பகுதியைச் சோ்ந்த விஜி (25) ஆகியோா் கைது செய்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா். 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன

முழு கட்டுரையைப் படிக்க →