திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 2,680- ஆக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2,755 ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையில், 33 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து இதுவரை 2,196 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 527 போ் சிகிச்சையில் உள்ளனா்.