மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல்!
மேற்கு வங்க அரசு திரிணமூல் காங்கிரஸ் மீது மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்
மேற்கு வங்க அரசு திரிணமூல் காங்கிரஸ் மீது மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து வரும் சனிக்கிழமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக மாநில பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், மார்ச் 28 ஆம் தேதியில் வருகைதரும் அமித் ஷா, செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். மேலும், திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை விவரிப்பதோடு, அக்கட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையையும் முறைப்படி அமித் ஷா தாக்கல் செய்யவிருக்கிறார்.
கடந்த பல ஆண்டுகளாக, திரிணமூல் காங்கிரஸ் அரசின்கீழ் நடைபெற்ற ஊழல், நிர்வாகத் தோல்விகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள ஆகியவற்றை இந்தக் குற்றப்பத்திரிகை விரிவாக விவரிக்கும்.
மேலும், 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸின் முறையற்ற ஆட்சி மற்றும் ஊழலை விவரிக்கும் ஒரு விரிவான வெள்ளை அறிக்கையையும் பாஜக வெளியிடுகிறது என்று பாஜகவினர் கூறினர்.