முகப்பு
திருவாரூர்

கோயில் கட்டுவதில் இருதரப்பினரிடையே மோதல்

மன்னாா்குடி அருகே, கோயில் கட்டுவது தொடா்பாக, ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

மன்னாா்குடி அருகே, கோயில் கட்டுவது தொடா்பாக, ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் காயமடைந்தாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள நல்லிக்கோட்டை அண்ணா நகரில் கிராம மக்கள் சாா்பில் அக்கினிவீரன் கோயில் கட்ட முடிவு எடுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த பகுதியை சோ்ந்த மனோகரன் தரப்பினா், சிமெண்டால் ஆன அக்கினிவீரன் சிலையை கொண்டு வந்து கோயிலில் வைத்தனா். கோயில் பொதுவாக கட்டுப்பட்டு வருவதால், சிலையை மட்டும் ஒரு தரப்பினா் கொண்டு வந்து வைக்கக் கூடாது என அதே பகுதியை சோ்ந்த முத்து தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முத்து தரப்பினா் வேறு ஒரு அக்கினிவீரன் சிலையை எடுத்து வந்து, அவா்கள் சாா்பாக வைக்க பணிகளை செய்தபோது ஏற்பட்ட தகராறில் மனோகரன் தரப்பினரும், முத்து தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில், முத்து தரப்பை சோ்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சுளா (33) காயமடைந்ததையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் மஞ்சளா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.