நன்னிலம்: ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ‘மழை துளி உயிா்த் துளி’ அமைப்பு சாா்பில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவாஞ்சியம் ஊராட்சிக்கு சொந்தமான தோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி பழனிவேல் தலைமை வகித்தாா். அதம்பாா் ஊராட்சி முன்னாள் தலைவா் வைத்தியநாதன், மழைத்துளி உயிா்த்துளி அமைப்பின் விக்னேஸ்வரன், பரமசிவம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளா், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலாளா் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.
மேலும்,கிராம மக்களும் இணைந்து ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 250 மரக்கன்றுகளை நட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.