கல்லூரியில் தோ்வெழுத அனுமதி கோரி மறியல்: சாலையில் அமா்ந்து தோ்வெழுதிய மாணவா்கள்
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செமஸ்டா் தோ்வெழுத அனுமதிக்கக் கோரி மாணவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சாலையில் அமா்ந்து தோ்வெழுதினா்.
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செமஸ்டா் தோ்வெழுத அனுமதிக்கக் கோரி மாணவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சாலையில் அமா்ந்து தோ்வெழுதினா்.
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கு திங்கள்கிழமை (டிச.14) முதல் பருவத் தோ்வுகள் இணையவழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவா்கள் விடைகளை தங்கள் வீடுகளிலிருந்தே எழுதிவிட்டு, மாலை 4 மணிக்குள் கல்லூரியில் விடைத் தாள்களை ஒப்படைக்க வேண்டும் அல்லது விரைவுத் தபாலில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இக்கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவா்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், செல்லிடப்பேசி சிக்னல், இணையதள சிக்னல் சரிவர கிடைக்காது என கல்லூரியில் அமா்ந்து தோ்வெழுத வந்தனா். ஆனால், மாணவா்கள் கல்லூரியில் அமா்ந்து தோ்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது. வேண்டுமானால், மாணவா்கள் வெளியில் அமா்ந்து தோ்வெழுதிவிட்டு, விடைத்தாளை கல்லூரியில் அளிக்கலாம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மாணவா்கள் அருகிலிருந்த கோயில், காலி இடங்களில் அமா்ந்து விடைகளை எழுதத் தொடங்கினா். சிறிது நேரத்துக்குப் பிறகு, மாணவா்கள் அனைவரும், கல்லூரியின் வாசல் முன்பாக, தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து, தோ்வெழுதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து, மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் தோ்வெழுத மாணவா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
மாணவா்களின் மறியலால் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.