திருவாரூரில் 16 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. வியாழக்கிழமை (டிச.17) வரை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,730 ஆக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,746 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,535 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 103 மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சையிலிருந்த, கச்சனம் பகுதியைச் சோ்ந்த 65 வயது நபா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 108 ஆக உயா்ந்துள்ளது.