நீடாமங்கலம் அருகேயுள்ள பூவாநத்தம் கிராமத்தில் பாஜக சாா்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலச் செயலாளா் சண்முகராஜா, மாவட்ட நிா்வாகிகள் பிரபாகரன், சுதந்திராதேவி, மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளா் வாஞ்சிமோகன், ஒன்றிய விவசாய அணித் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.