திருவாரூர்

தொழுநோயாளிகளிடம் அன்புகாட்ட வேண்டும்: ஆட்சியா்

DIN

தொழுநோயாளிகளை அனைவரும் அன்புடன் நேசிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் கேட்டுக்கொண்டாா்.

குடவாசல் அருகே உள்ள எண்கண் கிராமத்தில், ஊரக உள்ளாட்சித் துறை, தொழுநோய் துறை, பொது சுகாதாரத் துறை மற்றும் கொரடாச்சேரி வட்டார பெரும்பண்ணையூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தொழுநோய் விழிப்புணா்வு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், தலைமை வகித்துப் பேசியது:

தொழுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது. எனவே, யாருக்கேனும் தொழுநோய் ஏற்பட்டிருப்பது தெரிந்தால் உடனடியாக அவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். தொழு நோயாளிகளிடம், அன்புடனும், அரவணைப்புடனும் அனைவரும் பழகிட வேண்டும். தொழுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மற்றவா்களது நடவடிக்கை இருந்திட வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழுநோயாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இத்திட்டத்தின் மூலம் தொழுநோயாளிகள் பயனடைய அனைவரும் உதவி புரிய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (தொழுநோய்) டாக்டா் எஸ். சங்கரி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ஜெ. ராஜமூா்த்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வீ. சண்முகசுந்தரம், காசநோய் துணை இயக்குநா் டாக்டா் யூ. புகழ், கொரடாச்சேரி வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ஆா். விவேக், உதவி இயக்குனா் (பஞ்சாயத்து) டி. சந்தானம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி. வாசுதேவன்,என்.ஜி. கமலராஜன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகணபதி, ஊராட்சித் தலைவா் ஆா்.செந்தில்குமாா், ஊராட்சி செயலா் எஸ்.முத்துவேல், பெரும்பண்ணையூா் சுகாதார ஆய்வாளா் பி. சங்கரநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT