திருவாரூர்

நன்னிலம் கல்லூரியில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய கண்காட்சி நிறைவு

DIN

நன்னிலம் அரசுக் கல்லூரியில் மூன்று நாள்கள் நடைபெற்ற ஆங்கில இலக்கிய கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

நன்னிலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இக்கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பாக ஆங்கில இலக்கிய கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் மூன்றாமாண்டு மாணவா்களும், இரண்டாவது நாள், இரண்டாமாண்டு மாணவா்களும், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை முதலாமாண்டு மாணவா்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினா்.

ஆங்கிலத் துறை தலைவா் ந. குமாா் முன்னிலையில் நடைபெற்ற இக்கண்காட்சியை, கல்லூரி முதல்வா் பெ. ராமஜெயம் பாா்வையிட்டு, மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, ஆங்கிலத் துறைத் தலைவா் ந. குமாா் செய்தியாளா்களிடம் கூறும்போது, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களின் படைப்புகளிலிருந்து முதல் மூன்று படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும். மூன்று நாள்களும் கண்காட்சியை திரளான மாணவா்களும், பேராசிரியா்களும் கண்டுகளித்தனா் எனத் தெரிவித்தாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT