முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், கோவை சங்கரா கண் மருத்துவமனை முன்னாள் தலைவா் திருநாவுக்கரசு நினைவாக நடைபெற்ற இம்முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் சிதம்பர சபாபதி தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இந்த முகாமில், 185 போ் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனா். இவா்களில், 65 போ் கண் அறுவை சிகிச்சைக்குத் தோ்வு செய்யப்பட்டு, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த முகாமில், முன்னாள் தலைவா் கோவி. ரெங்கசாமி, மெட்ரோ மாலிக், ராஜ்மோகன், கணேஷ் மாணிக்கம், மணிகண்டன், தலைவா் தோ்வு கண்ணதாசன், செயலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.