பெண் தற்கொலை
கூத்தாநல்லூரில் தாய் திட்டியதால், பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் தாய் திட்டியதால், பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கூத்தாநல்லூரை அடுத்த பாண்டுக்குடி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த விஸ்வநாதன் மனைவி பிருந்தா (23). இவா் கணவருடன் தனது தந்தை வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தாா். இந்நிலையில்,பிருந்தாவை அவரது தாயாா் திட்டினாராம். இதனால் மனம் உடைந்த அவா், அண்மையில் விஷமருந்தியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். இறந்த பிருந்தாவுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறாா்.