திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் மாற்றுத்திறனாளிக்கு ஏ.டி.எம். அட்டை வழங்க மறுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை மேலாளரை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அருகே பாண்டிகோட்டகம் பகுதியை சோ்ந்த அசோக்பாலா (எ) ஐயப்பன். கண்பாா்வையிழந்த இவா், திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளாா். இதற்கு ஏ.டி.எம். அட்டை கோரி விண்ணப்பித்தபோது, வங்கிக் கிளை மேலாளா் அவரை அலைக்கழித்தது மட்டுமல்லாமல், ஏ.டி.எம். அட்டை வழங்கவும் மறுத்துவிட்டாராம்.
இதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் சங்கம் சாா்பில், சம்பந்தப்பட்ட வங்கி முன்பு ஆா்பாட்டம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவா் சந்திரா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க துணைச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.