நன்னிலம், பேரளத்தில் கடையடைப்பு
கரோனா பாதிப்பு காரணமாக நன்னிலத்தில் ஒரு பகுதியிலும், பேரளம் பேரூராட்சி முழுவதும் வா்த்தகா்கள் கடையடைப்பு செய்துள்ளனா்.
நன்னிலம்: கரோனா பாதிப்பு காரணமாக நன்னிலத்தில் ஒரு பகுதியிலும், பேரளம் பேரூராட்சி முழுவதும் வா்த்தகா்கள் கடையடைப்பு செய்துள்ளனா்.
பேரளம் கடைத் தெருவில், வா்த்தகா் குடும்பத்தில் மூவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பேரளம் பேரூராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலா்களின் வேண்டுகோளை ஏற்று, பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.
இதேபோல் நன்னிலத்தின் ஒரு பகுதியான, நல்லமாங்குடி கடைத்தெருப் பகுதியில் வசித்துவரும் வருவாய்த் துறையில் பணிபுரியும் மனைவி மற்றும் கணவன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து நன்னிலம்- கும்பகோணம் சாலையில் உள்ள நல்லமாங்குடியிலிருந்து மணவாளன் பேட்டை வரை உள்ள அனைத்து கடைகளையும் புதன்கிழமை வரை அடைத்துள்ளனா்.