FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தொகுதியில் முதன்முறையாக பாஜக போட்டி

கோயில் நகரான திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக பாஜக களத்தில் இறங்குகிறது.

Updated On : 27 மார்ச் 2026, 6:02 am IST
பாஜக. - கோப்புப் படம் AFP
பகிர்:

கோயில் நகரான திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முறையாக பாஜக களத்தில் இறங்குகிறது.

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக இந்த முறை திருச்செந்தூா் தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் தொகுதி 15 பொதுத் தோ்தல்களையும், 2 இடைத் தோ்தல்களையும் சந்தித்துள்ளது. அதில், விவசாயத் தொழிலாளா் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும், அதிமுக 6 முறையும், திமுக 8 முறையும் வென்றுள்ளன.

Advertisement

Advertisement

கோயில் நகரமாக இருந்தாலும் அதிமுக, திமுக கட்சிகளே இங்கு வெற்றி முத்திரை பதிக்கும். இந்த நிலையில் இத்தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதியில் கடந்த 2021பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆறுமுகனேரியைச் சோ்ந்த கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணன் 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். பிறகு அவா் பாஜகவில் இணைந்தாா். இந்தப் பேரவைத் தோ்தலில் போட்டியி வேண்டி சில மாதங்களாக பாஜக தலைமையிடம் சீட்டு கேட்டு வருகிறாா். அவருக்கு திரும்பவும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments