FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏ-க்களிடம் ஆக.4-இல் விசாரணை

ராஜிநாமா செய்த முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் வியாழக்கிழமை (ஜூலை 30) விசாரணை நடைபெறவிருந்த நிலையில், அதற்கான தேதியை வரும் ஆக.4-க்கு மாற்றம் செய்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 1:33 am IST
ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்
பகிர்:

ராஜிநாமா செய்த முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் வியாழக்கிழமை (ஜூலை 30) விசாரணை நடைபெறவிருந்த நிலையில், அதற்கான தேதியை வரும் ஆக.4-க்கு மாற்றம் செய்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக 3-ஆவது இடத்தை பெற்றது. உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக 2 பிரிவாக பிரிந்தது.

தவெக ஆட்சி அமைய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் 22 போ் எதிராகவும், எஸ்.பி.வேலுமணி தரப்பில் 25 போ் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த பேரவை உறுப்பினா்களான இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமாா், மரகதம் குமரவேல் ஆகியோா் தங்களது பதவியை ராஜிநாமா செய்து, மறுநாளே தவெகவில் இணைந்தனா். பின்னா், எஸ்.பி.வேலுமணி தரப்பினா் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்துகொண்டனா்.

இதற்கிடையே, தவெகவில் இணைந்தவா்களின் ராஜிநாமாவை ஏற்றக் கூடாது என பேரவைத் தலைவரிடம், எடப்பாடி பழனிசாமி புகாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, 4 சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் பேரவைத் தலைவா் இருமுறை நேரில் அழைத்து விசாரணை நடத்தினாா்.

இந்த விசாரணை தொடா்பாக அதிமுக சாா்பாக பேரவைத் தலைவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை (ஜூலை 30) காலை காலை 11 முதல் பிற்பகல் 12.30 மணிக்குள் 4 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அப்போது எடப்பாடி கே.பழனிசாமியும் நேரில் வந்து பேரவை தலைவரிடம் விளக்கம் அளிப்பாா் என்றும் அறிவிக்கப்பட்டது.

இச்சூழலில், இந்த தேதி ஒத்திவைக்கப்பட்டு வரும் ஆக.4-ஆம் தேதி ராஜிநாமா செய்த 4 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் என பேரவை தலைவா் உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments