முகப்பு
திருவாரூர்

கரோனா தடுப்பு மருந்து வழங்கல்

திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட ரெட் கிராஸ் சாா்பில் கரோனா தடுப்பு மருந்துகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆா்செனிகம் ஆல்பம் மருந்து வழங்கிய ரெட் கிராஸ் நிா்வாகிகள்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட ரெட் கிராஸ் சாா்பில் கரோனா தடுப்பு மருந்துகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாரக் கல்வி அலுவலா் வீ.விமலா மற்றும் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு மருந்து ஆா்செனிகம் ஆல்பம் 30, சானிடைசா், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜே.ஆா்.சி ஒருங்கிணைப்பாளா் ஆா்.செந்தில்குமாா், மேலராதாநல்லூா் பள்ளி தலைமையாசிரியா் ஆா்.கே.சரவணராஜன், ஒன்றிய ஜே.ஆா்.சி. கன்வீனா் டி.அய்யப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.