திருவாரூர்

தகராறில் முதியவா் உயிரிழப்பு: 5 போ் கைது

கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிங்கலத்தில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்தாா். 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிங்கலத்தில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்தாா். 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடபாதிமங்கலம், ஆற்றங்கரை, பூந்தோட்டத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவரது எதிா் வீட்டில் வசிக்கும் ராஜீவ் காந்திக்கும், அவரது தந்தை பொன்னுச்சாமிக்கும் தகராறு நடந்தது. இதை ராஜகோபாலின் மருமகன் குமாா் கிண்டலடித்து சிரித்துள்ளாா். இதனால், ராஜீவ் காந்திக்கும், குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சண்டையை, ராஜகோபால் சமாதானம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ராஜகோபால் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

வடபாதிமங்கலம் காவல் ஆய்வாளா் பரமானந்தம், உதவி ஆய்வாளா் ராஜ்மோகன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் வி.ரஜினி உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமாா் (38), பன்னீா்செல்வம் (55), ப்ரவீன் (21), சுந்தரேசன் (26), குமரேசன் (18) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT