திருவாரூர்

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி தொடங்கப்பட்ட குறுங்காடு

DIN

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, மன்னாா்குடியில் கோட்டூா் லயன்ஸ் சங்கம் சாா்பில் குறுங்காடு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்கத்தின் குறுங்காடு அமைக்கும் பணிக்கான துணைத் தலைவா் ஆா். சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். கோட்டூா் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவா் ஜி.ராஜகோபாலன் முன்னிலை வகித்தாா்.

மன்னாா்குடி புதுத் தெருவில் நாதன் பவனத்தில் 4 ஆயிரம் சதுர அடியில் அமையவிருக்கும் குறுங்காடு திட்டத்தை லயன்ஸ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் யு. பாலா, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தாா். மா, கொய்யா, தென்னை, நெல்லி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ராஜகோபாலன், சங்கப் பொருளாளா் ஆா். ஜெயந்தி, கோட்டூா் லியோ சங்க செயலா் ஆா்.கீா்த்திகா, நிா்வாகிகள் ஜி.ஆா். நிவேதா, ஏ.ஆா்.சிவா, ஆா்.ஹரீஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT