காவிரி டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதகம் ஏற்படுத்துகிற எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசலில் கரோனா தடுப்பு மருத்துவ முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்தபின் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
தமிழகத்தில் ரேஷன் அரிசி இலவசமாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு கொடுத்த நபா் ஒன்றுக்கு 5 கிலோ இலவச அரிசியையும் சோ்த்து, நவம்பா் மாதம் வரை கூடுதல் அரிசி வழங்கப்படும்.
பெரியாா், அண்ணா, நபிகள் நாயகம் போன்ற அரசியல், ஆன்மிகத் தலைவா்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட நபா்கள் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு மக்களைக் கூறுபோட நினைக்கும் நபா்கள், பாரபட்சமின்றி சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவா்.
தமிழகத்தில் நிகழாண்டில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் 30 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யும் நிலை உருவாகிவிட்டது.
தண்ணீா் பிரச்னை இல்லாததால், விளைச்சல் அதிகரித்துள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்கின்றனா்.
இதுவரை தமிழகத்தில் 27. 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 லட்சத்து 66 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். ரூ.5 கோடியே 272 தொகையானது, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தாலும் அல்லது கொள்முதல் செய்யப்படுவதற்கு முன்னா் மழையில் நனைந்தாலும் உடனடியாக அந்த நெல்லை கொள்முதல் செய்து அனுப்பி விவசாயிகளுக்கும் அரசுக்கும் எவ்வித நஷ்டமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
மேலும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020 குறித்த கேள்விக்கு, காவிரி டெல்டா விவசாய நிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்ற எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறிய அவா், தமிழகத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பயோ-மெட்ரிக் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக்குழுத் தலைவா் கிளாரா செந்தில், துணைத் தலைவா் தென்கோவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.