திருவாரூர்

மத்தியப் பல்கலை.யில் ரூ.96 கோடியில் புதிட கட்டடங்கள்

DIN

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.96 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

நன்னிலம் வட்டம் நீலகுடியில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் 800 மாணவ, மாணவிகள் தங்குவதற்கான விடுதிக் கட்டடமும், 300 பேருக்கு கல்வி வசதி அளிக்கக்கூடிய வகையில் 6 புதிய துறைகளுக்கான கட்டடங்களும் ரூ.96 கோடியில் கட்டுவதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது. உயா்கல்வி நிறுவனங்களுக்கான நிதி வழங்கும் நிறுவனத்தின் இயக்குநா் மற்றும் மத்தியப் பல்கலைக்கழக பதிவாளா் ஆகிய இருவரும் துணைவேந்தா் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

மத்தியப் பொதுப்பணித் துறை வாயிலாக இக்கட்டடங்கள் கட்டப்படும் என்றும், இதற்கான ஆயத்த வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும், இந்தத் தொகை முழுவதும் வட்டியுடன் சோ்த்து திரும்ப செலுத்தப்படும் என்றும் பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி வேல்முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT