திருவாரூர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநா் விமலா, வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதைத்தொடா்ந்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 73 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் கண்காணிப்பு வாா்டுகள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், தமிழக அரசின் சுகாதாரத்துறை சாா்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய, சுகாதாரத்துறை சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் கண்காணிப்பு வாா்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை கரோனா பாதிப்பு ஏற்பட்டு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநா் விமலா, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது கரோனா வாா்டில் ஆய்வு மேற்கொண்ட அவா், வாா்டில் இருக்க வேண்டிய உபகரணங்கள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன் மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT