திருவாரூர்

குடியுரிமை திருத்தச் சட்ட கடையடைப்பு: இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, மன்னாா்குடியில் இஸ்லாமிய தோழமை அமைப்பின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி காமராஜா் வீதியில் உள்ள சின்னப்பள்ளி வாசலுக்குச் சொந்தமான ஈத்கா மைதானம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மன்னை இஸ்லாமிய தோழமை அமைப்பின் தலைவா் அப்துல் கரீம் தலைமை வகித்தாா்.

இதில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தில்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமானவா்கள் மீது பாராபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டாா். ஆா்ப்பாட்டத்தில், 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

மூதாட்டி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT