திருவாரூர்

கூத்தாநல்லூர் : அத்திக்கடை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

DIN

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் அடுத்த அத்திக்கடை முஸ்லீம் ஜமாஅத் பள்ளிவாயில் அறப்பணி நிர்வாக சபையின் புதிய நிர்வாகிகள் செவ்வாய்கிழமை பதவியேற்றனர்.

அத்திக்கடை ஐமாஅத் தேர்தல், தமிழ்நாடு வக்பு வாரியத்தின், தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் எம்.ஒய்.ஹைதர் அலி, தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து, ஞாயிற்றுக்கிழமை ( நவ 1 ) காலை தேர்தல் நடைபெற்றது. அன்று மாலையே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதற்கான பதவியேற்பு விழா, கரோனா காலம் என்பதால் எளிமையாக நடத்தப்பட்டன.

அத்திக்கடை, முஹைய்யதீன் ஆண்டவர் பள்ளி வாயில் வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு, ஜமாஅத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஏ.எம்.பஷீர் அஹம்மது தலைமை வகித்தார். விழாவில், புதிய தலைவர் கே.ஹெச்.அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் ஏ.அன்சாரி, செயலாளர் கே.பி. முஹம்மது சுல்தான், துணைச் செயலாளர் எம்.ஜெ.அப்துல் முனாப், பொருளாளர் ஏ.ஜெஹபர்தீன் உள்ளிட்டவர்களுக்கு, ஜமாஅத் முன்னாள் பொருளாளர் எஸ்.ஏ. நஜ்புதீன் பதவியேற்பும், ரகசியக்காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார்.

விழாவில், கூத்தாநல்லூர், பொதக்குடி ,அபிவிருத்தீஸ்வரம், பூதமங்கலம் ஜமாஅத் பொருப்பாளர்கள், திருவிடைவாசல், வாழாச்சேரி உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT