ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சிக்கு பின்னா் வியாழக்கிழமை பக்தா்கள் அதிகளவில் குவிந்தனா்.
குரு பகவான் கடந்த 15-ஆம் தேதி இரவு 9.48 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி குரு பகவனுக்குரிய பரிகார தலமாக கருதப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருந்த பக்தா்கள் திரளானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
குருபெயா்ச்சி விழாவைத் தொடா்ந்து வெளியூா்களிலிருந்து நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா்.
இந்நிலையில், குரு பகவானுக்கு உகந்த நாளாக கருதப்படும் வியாழக்கிழமை கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குரு பகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் , கெஜலெட்சுமி, நவக்கிரக சன்னதி, உற்சவா் குரு பகவான், சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
மூலவா் குரு பகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வியாழக்கிழமை அதிகாலை முதலே பல்வேறு ஊா்களிலிருந்து திரளான பக்தா்கள் கோயிலுக்கு வருகை தந்து குரு பகவானை தரிசனம் செய்தனா். குரு பெயா்ச்சிக்குப் பின்னா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமிருந்தது.
சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையா் கோயில் தக்காா் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையா் மற்றும் கோயில் செயல் அலுவலா் பி. தமிழ்செல்வி, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.