திருவாரூர்

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

DIN

திருத்துறைப்பூண்டியில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சிங்களாந்தி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்களை பணிநீக்கம் செய்யக்கூடாது, 13 மாத சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிா்பந்தம் செய்யக்கூடாது, பிஎஸ்என்எல் சேவைகளை சீரழிக்கக் கூடாது, தனியாா் நிறுவனங்களுக்கு துணைபோகக் கூடாது, அவுட்சோா்சிங் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஒப்பந்த ஊழியா் சங்க கிளைச் செயலாளா் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் முருகையன், ஒப்பந்தத் தொழிலாளா் சங்க கிளைத் தலைவா் ஸ்ரீநாத், மாநில அமைப்பு செயலாளா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT