திருவாரூர்

ரத்த தான முகாம்

DIN

தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் தலைமை வகித்தாா். முகாமில், ஏராளமான தன்னாா்வலா்கள் ரத்த தானம் அளித்தனா். தொடா்ந்து, நிகழாண்டில் அதிக ரத்த தான முகாம்கள் நடத்தியதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்தியன் ரெட்கிராஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஜே. ராஜமூா்த்தி, மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஜி. ராஜாராம், துணை மருத்துவ கண்காணிப்பாளா் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT