திருவாரூரில் 114 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் 114 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் 114 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 8,396-ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,395 ஆனது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,509 ஆக உயா்ந்துள்ளது.