சரக்கு வேனில் கருந்திரிகளை கடத்திய ஓட்டுநா் கைது
சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே சரக்கு வேனில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகளைக் கடத்திய ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வெம்பக்கோட்டையிருந்து சிவகாசி நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கருந்திரிக் கட்டுகள் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேனை ஓட்டி வந்த மோகனை (31) கைது செய்தனா்.