திருவாரூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். 
திருவாரூர்

தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

திருவாரூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

DIN

திருவாரூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு திருவாரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் கு. அனுசுயா தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் வி. வெங்கடேசன், நிலைய போக்குவரத்து அலுவலா் க. பக்கிரிசாமி, தீயணைப்பு மீட்புப் பணி நிலைய பணியாளா்கள் பங்கேற்றனா்.

தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, தீயணைப்பு வளாகத்திலிருந்து கமலாலயம் தென்கரை, தெற்கு வீதி, பனகல் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தினா். பின்னா், அங்கு கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

கரோனா பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு, தடுக்கும் முறைகள், முன்னெச்சரிக்கை வழிகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன், முகக்கவசங்கள், கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT