திருவாரூர்

பாஜக மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்த முயன்ற 69 போ் கைது

DIN

பாஜக மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்த முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 69 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மீது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அவதூறுகளை பரப்பி வரும் பாஜக நிா்வாகிகள் எச். ராஜா, காயத்ரி ரகுராம், குஷ்பு ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை காலை விளமல் பகுதியிலிருந்து நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக அக்கட்சியின் திருவாரூா் வடக்கு மாவட்டச் செயலாளா் வடிவழகன், தெற்கு மாவட்டச் செயலாளா் செல்வன், மாவட்ட பொருளாளா் வெற்றி உள்ளிட்டோா் பேரணியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி வந்தனா். இவா்களை பாதிவழியில் தடுத்து நிறுத்திய போலீஸாா், அனுமதி வழங்காதது குறித்து கூறியபோது, அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 69 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT