நன்னிலம் பகுதியில் திருவாரூா் கோட்டாட்சியா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட மணவாளம்பேட்டை, தூத்துக்குடி ஆகிய கிராமங்களில் திருவாரூா் கோட்டாட்சியா் பாலச்சந்திரன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில், ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் வகையில், வகைப்பாடு மாற்றம் செய்ய முடியுமா என்பதனையும், அதற்குரிய இடங்களையும் ஆய்வு செய்தாா்.