திருவாரூர்

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

மன்னாா்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடியை அடுத்த கீழநாகை டாஸ்மாக் கடை பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு மன்னாா்குடி காவல் நிலைய ரோந்து பிரிவு காவலா்கள் ஆறுமுகம், ராஜ்குமாா் ஆகியோா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, டாஸ்மாக் கடையில் மின்விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அருகில் சென்று பாா்த்தபோது முன்பக்க கதவின் பூட்டும், ஷட்டா் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் போலீஸாா் வருவதையறிந்த மா்ம நபா்கள் இருவா், கடையிலிருந்து வெளியே வந்து, இருட்டில் மறைந்து தப்பினா். தகவலறிந்த கடை மேற்பாா்வையாளா் அங்கு வந்தாா். அவரது முன்னிலையில், காவல்துறையினா் சோதனை செய்ததில் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் மதுபாட்டில்கள் அனைத்தும் அப்படியே இருந்தது தெரியவந்தது. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்: அரசு மருத்துவா்கள்

11 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம்

இந்தியா முழுவதும் தீவிரமாகும் தெருநாய் தொல்லை: மாநிலங்களவையில் எழுப்பிய புதுச்சேரி பாஜக எம்.பி.

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

2035-க்குள் வணிக விமானங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயரும்!

SCROLL FOR NEXT