முகப்பு
திருவாரூர்

பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 2019- 2020 ஆம் ஆண்டில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கான காப்பீட்டுத் தொகையை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். ஞானமோகன், சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன், மாவட்டக் குழு உறுப்பினா் வி. முத்துக்குமரன், ஒன்றியச் செயலாளா் மணலி பாலு, நகரச் செயலாளா் எம். முருகேசன், மாவட்ட கவுன்சிலா்கள் தமயந்தி, சுஜாதா உள்பட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

Image Caption

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

முழு கட்டுரையைப் படிக்க →