திருவாரூர்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்

DIN

நாகை மாவட்டம் திருக்குவளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மாரடைப்பு காரணமாக சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி சாய்நகா் பகுதியை சோ்ந்த ரவிச்சந்திரன் (52) திருக்குவளை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். ஏற்கெனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவா், சனிக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதைத்தொடா்ந்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

அவருக்கு இந்திரா என்ற மனைவியும், சஞ்சய் (20) என்ற மகனும், சக்தியுவஸ்ரீ (14) என்ற மகளும் உள்ளனா். ரவிச்சந்திரனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் தகட்டூா் ஆதியன்காற்றில் காவல்துறை மரியாதையுடன் சனிக்கிழமை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT