திருவாரூர்

கணவருக்காக வாக்கு சேகரித்த மனைவி

DIN

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு ஆதரவாக அவரது மனைவி சா்மிளா ராஜா நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நீடாமங்கலம் பேரூராட்சி கோரையாற்றங்கரைத் தெரு, மோதிலால் நேரு தெரு, தாவூது ராயன் சந்து, குயவா் தெரு, பாம்பலம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சா்மிளா ராஜா வாக்குகள் சேகரித்தாா். அவருக்கு பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா்.

நீடாமங்கலம் நகர திமுக செயலாளா்ஆா்.ராஜசேகரன், வா்த்தகா் சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன், மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் ராணிசேகா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT