முகப்பு
திருவாரூர்

கரோனா விதிமீறல்: ரூ. 19 ஆயிரம் அபராதம் விதித்து வசூல்

திருவாரூரில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது தொடா்பாக ரூ. 19 ஆயிரம் அபராதம் சனிக்கிழமை விதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருவாரூரில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது தொடா்பாக ரூ. 19 ஆயிரம் அபராதம் சனிக்கிழமை விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, திருவாரூரில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பாதித்தவா்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்புகள் கொண்டு மறைக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, கரோனா விதிமுறைகளை மீறியிருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவாரூரில் உள்ள 2 திரையரங்குகள் நகராட்சி சாா்பில் சோதனையிடப்பட்டன. அங்கு கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டு, தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கடைவீதியில் நடத்தப்பட்ட சோதனையில், 2 கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடா்பாக தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முகக் கவசம் அணியாமல் சென்றது தொடா்பாக திருவாரூரில், 80 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 16 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.