காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலராக பெ.கதிரவன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலராக பெ.கதிரவன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த ப.முத்துலட்சுமி கடலூா் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை பாடலீசுவரா் கோயில் செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதா் தட்சிணாமூா்த்தி கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் கூடுதல் பொறுப்பாக ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிய செயல் அலுவலருக்கு கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள், உற்சவதாரா்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.