கேரளத்தில் இந்திய மாணவா் சங்க நிா்வாகி அபிமன்யு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் மாவட்ட செயலாளா் ரா. ஹரிசுா்ஜித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் ப. சுா்ஜித், மாவட்ட துணைச் செயலாளா் வீ. சந்தோஷ், நகரத் தலைவா் அபினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, சிபிஎம் கட்சி அலுவலகத்தில் அபிமன்யுவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.